என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவறை கட்ட தோண்டிய குழியில் கற்சிலைகள் கண்டெடுப்பு
- வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.
- 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.
இதனையடுத்து மன்னார்குடி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மன்னார்குடி வருவாய் ஆய்வாளர் மாதவராஜ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வீரசேகரன் ஆகியோர் வந்தனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில தோண்டியபோது 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளை வருவாய்துறை அதிகாரிகள் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தனர். மேலும் சிலைகளின் காலம், அதன் தொன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்