search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சி பகுதியில்  முறையற்ற அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
    X

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் முறையற்ற அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

    • 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக புகார் வந்தது.
    • முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் முறையற்ற மற்றும் பேரூராட்சி அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டித்து முறைப்படுத்த சிவகிரி பேரூராட்சி மன்றத்தின் மூலமாக கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தது.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு உத்தரவின்படி, சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி பணி யாளர்கள் ஆகியோர் காவல்துறை யினருடன் இணைந்து அந்த பகுதியில் இருந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு துண்டித்தனர்.

    மேலும் வீடுகளில் முறையான அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு சிவகிரி பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று முறைப்படுத்த வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பித்து அனுமதி வாங்கி பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகிரி பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்யும்போது முறையான அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் இருப்பது தெரிய வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×