search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில்  நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
    X

    தென்திருப்பேரையில் நேரடி கொள்முதல் நிலையத்தை தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் தொடங்கி வைத்த காட்சி.

    தென்திருப்பேரையில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
    • தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.

    இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் குருகாட்டூர், கோட்டூர், மேலகடம்பா, கல்லாம்பாரை, தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவை செய்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் கொடுத்து பயனடையலாம்.

    தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் கோவில்துரை, நகர செயலாளர் முத்து வீர பெருமாள், கவுன்சிலர் ஆனந்த், நுகர் பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் இசக்கி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×