search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான பொருட்கள் விற்பனை மும்முரம்
    X

    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள்.

    திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான பொருட்கள் விற்பனை மும்முரம்

    • கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் பல்வேறு நாடுகளில் ஒரு மாதமாகவே கிறிஸ்துமஸ் விழா களைகட்டி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வழிபாட்டுக்குகூட தடைவிதிக்கப்பபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண விளக்குகளால் அலங்கரித்து குடில் அமைத்தும், நட்சத்திரங்களை தொங்கவிட்டும் அலங்காரம் செய்துள்ளனர்.

    குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாண்டாகிளாஸ் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல் வீடுகள் மற்றும் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் இரவு நேர வழிபாட்டிற்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    Next Story
    ×