என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் நாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு
    X

    தருமபுரி மாவட்டத்தில் நாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு

    • தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6159 தேர்வர்களில் 1313 பெண்கள் ஆவர்.
    • புளூடூத்துடன் இணைக்கப் பயன்படும் உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், சாதாரண கை கடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 26.08.2023 அன்று மாநிலம் முழுதும் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. காலையில் முதன்மை எழுத்துத் தேர்வும், பிற்பகலில் தமிழ் தாள் தேர்வும் இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6159 தேர்வர்களில் 1313 பெண்கள் ஆவர். அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 2100 பேரும் , விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1600 பேரும், விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 பேரும், பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 546 பேரும், விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்,1313 பெண்களும் தேர்வு எழுதவுள்ளனர்.

    இத்தேர்வுக்கு வரும் நபர்கள் செல்போன், புளூடூத்துடன் இணைக்கப் பயன்படும் உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், சாதா ரண கை கடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் எடுத்துவரும் உடைமைகளுக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். தேர்வெழுத வரும் நபர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பேனா ஆகியவைகளை மட்டும் உடன் எடுத்துவர வேண்டும்.

    சான்றிதழ்களை எக்கா ரணத்தைக் கொண்டும் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது. காலை 08.30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு உணவு இடைவேளை முடித்து 2 மணிக்குள்ளும் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும்.

    விதிமீறலில் ஈடுபடும் தேர்வர்கள் மீது தகுந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரு சக்கர வாகனங்களில் வரும் தேர்வர்கள் கட்டா யம் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு, விதியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து வாகனத்தில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு எந்தக் காரணத்தைக் கொண் டும் தகுந்த உத்தரவின்றி வெளியே செல்லக் கூடாது. தேர்வுக்கு ஆஜராகும் அனைத்து தேர்வர்களும் தகுந்த முறையில் கொ ரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இடைத் தரகர்களை நம்ப வேண்டாம். இவ் வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

    Next Story
    ×