என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி - 2 கிலோ தங்கமும் பக்தர்கள் வழங்கினர்
- பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
- மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (ெபாறுப்பு) அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவார பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 2 கிலோ 225 கிராமும், வெள்ளி 15¼ கிலோவும், வெளிநாட்டு பணம் 426-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்