என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோரணமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் பக்தர்களின் பொங்கல் விழா
- அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.
- சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
கடையம்:
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் நடைபெறும். மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜை இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும் கோவில் வளாகத்தில் பொங்கலை யொட்டி பக்தர்கள் பலர் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.