என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரராகவர் கோவில் முன்பு குளம்போல் தேங்கிய தண்ணீர்- கழிவுநீரும் கலந்ததால் பக்தர்கள் அவதி
    X

    வீரராகவர் கோவில் முன்பு குளம்போல் தேங்கிய தண்ணீர்- கழிவுநீரும் கலந்ததால் பக்தர்கள் அவதி

    • மழைவிட்டும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கி நின்றது.
    • கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் நகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தின் மேல் பகுதியில் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் இரவிலும் விட்டு,விட்டு மழை நீடித்தது.

    இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மாலை முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    திருவள்ளூரில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு கனமழையாக கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நீடித்த பலத்த மழையால் திருவள்ளூர் நகரம் முழுவதும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக திருவள்ளூர் வீரராகவர் கோவில் சன்னதி தெரு, பஜார் வீதி, ஆசூரி தெரு, விநாயகர் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேங்கி நின்றது. தண்ணீர் செல்ல வழியில்லாததால் வீரராகவர் கோவில் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழைவிட்டும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் இன்று காலை வரை தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் மழைநீருடன் கலந்து கழிவுநீரில் நடந்து சென்று கோவிலுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் நகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஆவடி, திருத்தணி, பூண்டி, திருவாலங்காடு உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மழை வெளுத்துவாங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)வருமாறு:-

    திருவள்ளூர் -25

    கும்மிடிப்பூண்டி - 4.

    Next Story
    ×