search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுஹட்டி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் - கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு
    X

    நடுஹட்டி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் - கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு

    • பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • ஆய்வின்போது பலர் உடனிருந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நீலகிரி மாவட்டத்தில், 2021-2022-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தையும், 2022-2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டபெட்டு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் சவ சடங்கு தளத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டதையும், 2022-2023 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டபெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்று வரும் சமையற்கூடம் கட்டும் பணியினையும், 2022-2023 ஆம் ஆண்டு 15-வது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் மேற் கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும், முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி பொறியாளர்கள் செல்வதுரை, ஜெயந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×