search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில்ரூ .8.57 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    நீலகிரி மாவட்டத்தில்ரூ .8.57 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • கலெக்டர் நேரில் ஆய்வு
    • மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை, முதுமலை, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர் வயல் பகுதியில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் ஊட்டி, நீலகிரி குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், ஆகிய 4 நகராட்சிப் பகுதிகளில் பொது மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும், முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் பகுதியில், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 32 பழங்குடியினர் மக்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஸ்ரீமதுரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவரது வீட்டின் அருகில், ரூ.281 லட்சம் மதிப்பில், 10 ஆடுகள் கொண்டு, ஆட்டுகொட்டாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதே ஊராட்சியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளையும், முதுமலை ஊராட்சியில், 15-வது நிதிமானிய குழு திட்டத்தின் கீழ், குனில் பகுதியில் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் செல்லும் (வடிகால்) கால்வாய் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி பகுதியில் ரூ.48.65 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சந்தை அமைக்கும் பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சி, அம்பலமூலாவில் பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.7 கோடி மதிப்பில் அம்பலமூலா முதல் கொட்டாடு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அம்பலமூலா பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும்,

    நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வட்டக்கொல்லி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.2.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையினையும் என மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அவ்வாறு கட்டப்படும் வீடுகளில், மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதுபோல மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது மக்களின் தேவைக்கு ஏற்ப 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளில் இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×