என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தா.அய்யம்பட்டியில் தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா
- விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
- சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தா.அய்யம்பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் கோவிலின் 3-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டும் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.
விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடை பெற்றது. இதில் தேசத்து மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் மேளதாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வ ளமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபா டுகள் மற்றும் மகா தீபார தனை நடைபெற்றது. இதை த்தொடர்ந்து வேடி யப்பன் கோவிலுக்கும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முனியப்பனுக்கு மாவிளக்கு எடுக்கும் ஊர்வ லமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்