search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்காசி:

    வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமை தாங்கினார். வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். சுகாதார நிலையத்தை சீர்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிர்வாகிகள் செல்லத்துரை, அருள்ராஜ், மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார். தென்காசி ஒன்றிய செயலாளர் முத்துசாமி முடித்துவைத்தார். நிர்வாகிகள் ரமேஷ், குத்தாலிங்கம், பேச்சியம்மாள், மாரியம்மாள், சீதை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×