என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில செயலாளர் சஞ்சீவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்ததற்கு மத்திய அரசைக்கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் எதிரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சஞ்சீவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நிர்வாகிகள் வேல்முரு கன், சிவக்குமார், பழனிவேல், முருகன் மற்றும் தொமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் அண்ணாதுரை நன்றி கூறினார்.
Next Story






