search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் பத்திர பதிவு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    கடையத்தில் பத்திர பதிவு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • சின்னத்தேர் திடலில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    கடையம்:

    கடையம் சின்னத்தேர் திடலில் வக்கீல் ராஜசேகர் தலைமையில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பத்திரபதிவு துறையில் சொத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும் பல மடங்கு உயர்த்த உத்தேசித்து வருவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முத்தையா, மகாமைதின், வக்கீல் ஜெயக்குமார், முல்லைநில தமிழர் விடுதலை கட்சி கரும்புலி கண்ணன்மற்றும் சுப்பிரமணியன், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×