search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி கையெழுத்து இயக்கம்
    X

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

    • கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
    • பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மொரப்பூர்,

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சுகவனம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் லியாகத், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் குமரவேல், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×