search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை தீபாவளி பண்டிகை- பூக்கள் விலை 3 மடங்கு அதிகரிப்பு
    X

    நாளை தீபாவளி பண்டிகை- பூக்கள் விலை 3 மடங்கு அதிகரிப்பு

    • ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை (24ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு சாமந்தி மற்றும் ரோஸ் 45 வாகனங்களிலும் மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்கள் 20 மினிவேன்கள் மூலம் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    பண்டிகையை முன்னிட்டு மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி, ரோஸ் ஆகிய பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ரகத்தை பொருத்து ஒரு கிலோ சாமந்தி ரூ.50-முதல் ரூ.80 வரை மட்டுமே விற்கப்படுகிறது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிலோ ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.600-க்கும், கிலோ ரூ.200க்கு விற்ற ஜாதி ரூ.600-க்கும், கிலோ ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,500-க்கும், கிலோ ரூ.60-க்கு விற்ற ரோஸ் ரூ.140-க்கும் விற்கப்படுகிறது.

    அதிகாலை முதல் விறுவிறுப்பாக தொடங்கிய பூ விற்பனை பின்னர் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. கனகாம்பரம், ரோஸ் ஆகிய பூக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. மல்லி மற்றும் முல்லை ஆகிய பூக்கள் நாள்தோறும் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய பூக்கள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) சாமந்தி-ரூ.50-ரூ.80, மல்லி-ரூ.700, அரளி-ரூ.350, ஜாதி ரூ.600, சம்பங்கி ரூ.70, கனகாம்பரம்-ரூ.1500, முல்லை-ரூ.600, பன்னீர் ரோஸ்-ரூ.120-ரூ.140, சாக்லேட் ரோஸ்-ரூ.140-ரூ.160.

    Next Story
    ×