என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் பிணம்
    X

    ரெயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் பிணம்

    • அவர்யார்? ரெயில் மோதி இறந்தாரா?
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருநின்றவூர் – வேப்பம்பட்டு ரயில் நிலையம் இடையே சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு பலியானாரா என்பது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×