search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    கடலூரில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும்.
    • ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்

    கடலூர்:

    ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில் பாஸ்கரன் ஜான் விக்டர் முத்துக்குமரன் நடராஜன் பழனிவேல் பூங்குன்றன் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×