search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி விளையாட்டு விழா- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    விளையாட்டு விழாவை விஜய் வசந்த் எம்.பி. கொடியேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    ஆலங்குளம் அருகே சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி விளையாட்டு விழா- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்

    • விழாவிற்கு கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 26-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியர் முத்து, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், மாநில தொழிற்சங்க ஐ.என்.டி.யூ.சி.வைகுண்ட ராஜா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் , மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா,தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் , மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கண்ணன், ரூபன் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார்.நல்லூர் சேகர குரு பிரே ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கல்லூரியில் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை திரும ண்டல பெருமன்ற உறுப்பி னர்கள் பால் நேசன் ஆண்டனி, ஜெயராஜ், கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பி னர்கள் பால்ராஜ், தேவ தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூ ரியின் பேராசிரி யர்கள், மா ணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜூலியன்ஸ் ராஜாசிங் செய்து, விளையாட்டு விழா விற்கான ஆண்டறிக்கையை சமர்பித்து நன்றி கூறினார்.

    Next Story
    ×