search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்கள்
    X

    காய்ந்து வரும் குறுவை பயிர்கள்.

    தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்கள்

    • குறுவை நடவு செய்த வயல்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் நிலை உள்ளது.
    • வாய்க்கால்களில் சரிவர தண்ணீர் வந்து சேரவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், சாலியமங்களம் பகுதியில் கடந்த சில வாரங்களாக குறுவை நடவு பணிகள் நடைபெற்று வந்தது.

    குறுவை நடவு செய்த வயல்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் நிலை உள்ளது.

    ஜூன் மாதமே விவசாய தேவைக்காக மேட்டூர் மற்றும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடுபட்ட போதிலும் வெட்டாறு, வெண்ணாற்றில் முறையாக தண்ணீர் திறந்து விடப் படாததால் வாய்க்கால்களில் சரிவர தண்ணீர் வந்து சேரவில்லை.

    இதனால் குறுவை நடவு வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன.

    இதே நிலை நீடித்தால் பல ஆயிரம் செலவு செய்து நடவு செய்த பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    எனவே அரசு உடனடியாக தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×