search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்
    X

    மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

    கொடைரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    கொடைரோடு:

    அம்மையநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கொடைரோட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் (பொறுப்பு) பழனிச்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சவுந்திரபாண்டியன், தி.மு.க பேரூர் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினர்.

    5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் வண்ணக்கிளி, வாசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×