என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான கார்த்திக்
கள்ளச்சாராயம் விற்றவர் கைது
- திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திரும ருகல் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமு தல் செய்தனர்.
திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 28) அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.
மேலும் இவர் காரை க்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்துவருவது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






