என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு- கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
- இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
- அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் ஜெயராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-
வடவீரபாண்டியன் (காங்.):-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது.
பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் அலைகழிக்க ப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ்குமார் (அ.தி.மு.க):-
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 2 வருடமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது.
நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.
எப்போது பணம் கிடைக்கும். பல வீடுகள் லிண்டல் மட்டத்தில் நிற்கிறது.
மேற்கொண்டு கட்டுமான பணிகள் தொடங்க பணம் கிடைக்காமல் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கினீர்கள்.
பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் பாதியிலயே நிறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் வீடு கட்டி கொடுத்தோம்.
பல்லவராயன்பேட்டை, இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அனைத்து பஸ் நிறுத்தத்திலும் அரசு பஸ்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி (தி.மு.க):-
காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.
காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ஆம்புலன்ஸ் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரித்துகொடுக்க வேண்டும்.
அரசு வீடுகட்டும் திட்டத்திற்கான ஓர்க் ஆர்டர் பலருக்கு வழங்கப்படாமலேயே இருந்து வருகிறது.
மோகன் (தி.மு.க):-
மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார்:-
மாப்படுகை கங்கை அம்மன் தெரு, பண்ணைத்தெரு, அழகர் நகர் பகுதிகளில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
மழைகாலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கும், கொசுவை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.
ஆணையர் அன்பரசு:
பொறியியல் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
அதனை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்