என் மலர்
உள்ளூர் செய்திகள்

5 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம்:
கொரோனாவின் தாக்கம் முழுமையாக முடியாத நிலையில்,மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக, கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சேலத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 2 அல்லது 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி யுள்ளது. இதில் ஓமலூர், தலைவாசல், ஏற்காடு, பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவரும் என்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்த்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்–கையும் அதிகரித்துள்ளது. தற்போது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளில் சானிடைசர், முக கவசம் ஆகிய வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.






