search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு: 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டம்
    X

    சாமியார்பேட்டை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு: 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டம்

    • சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன் வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர். இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை கண்டித்து கடலூர், மயிலாடுதுறை மாவட்ட புதுவைமாநில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கூடாது, இரட்டை மடி வலையை உபயோகிக்கூடாது. அதிக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர். அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு ெகாடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

    Next Story
    ×