என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய போது எடுத்த படம்.
ஏற்காட்டில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஏற்காடு காந்தி பூங்கா பகுதியில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று ஏற்காடு பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஏற்காடு காந்தி பூங்கா பகுதியில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று ஏற்காடு பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. இதில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
ஏற்காடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஹரிஅர்ச்சுனன் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுடன் இணைந்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
Next Story