search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கால்நடை மருத்துவ முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

    • மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி.
    • நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், பேங்க் ஆப் பரோடா, மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கால்நடை மருத்துவ முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், பேங்க் ஆப் பரோடா மேலாளர் சிவின்டு சட்டர்ஜி , பேங்க் ஆப் பரோடா விவசாய அதிகாரி மோனிகா, பேங்க் ஆப் பரோடா ராஜ்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், உள்ளிக்கோட்டை கால்நடை மருத்துவர் கார்த்திக், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் டி.தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கால்நடை மருத்துவ முகாமில் மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? மாடு, ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி? கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்ப டுகிறது.

    மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்த ப்படுகிறது. இந்த முகாமில் சிறந்த கால்நடைகன்றுகளை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ப டுகின்றன.

    Next Story
    ×