search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
    X

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

    • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மங்கத்ராம் ஷர்மா கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இது வரை 982.77 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்க ப்பட்டன.

    கொடைக்கானல், சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டு போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது.

    அந்த இடங்களில் சம்மந்தப்பட்ட அலுவ லர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாய கூடங்கள் என 75 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு துறை மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது உரிய முறையில் செயல்பட ரப்பர் படகு, மிதவைப்படகு, ரப்பர் டிங்கிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் குடிநீர், மின்வசதி உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து ரேசன் கடை களிலும் குடிமைப்பொரு ட்கள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தேவையான மருந்துகள் வைத்திருக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எஸ்.பி. பாஸ்கரன், திட்ட இயக்குனர் திலகவதி, வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சி யர்கள் கமலக்கண்ணன், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×