என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
- பயனாளிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது.
- பூக்கட்டுதல், வீட்டு வேலை செய்தலில் அதிக வருமானம் இல்லை.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் செயல்படுத்தப்படும் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டம் குறித்து நகராட்சி ஆணையர் பிரதான் பாபு எடுத்து கூறினார்.
மேலும், திட்டங்கள் குறித்த கருத்து கேட்பை மாநில திட்டக்குழு கொள்கை ஆலோசகர் ஆண்ட்ரு சேசுராஜ் ஒருங்கிணைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். பயனாளிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இதில் விவசாய வேலை, பூக்கட்டுதல், வீட்டு வேலை செய்தலில் அதிக வருமானம் இல்லை. எனவே, இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதில் தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனரக உதவி திட்ட அலுவலர் சாமிநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.