search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

    • ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொது இடங்க ளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து உருவாகும் குப்பைகளை கொட்டுதல், சாலை யோ ரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துதல், நகராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்படுத்து தல் போன்றவை குறித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி டி.எஸ்.பி., பார்த்தீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தேனி தாசில்தார் சர வணபாபு, நெடுஞ்சாலை த்துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, நகராட்சி சுகாதார அலு வலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    Next Story
    ×