அய்யலூர், வடமதுரை பகுதியில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கும் பணி

புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அனுமதி யின்றி வைக்கப்பட்ட சோலார் பேனல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்த தால் அவை அகற்ற ப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வழி த்தடங்களில் மீண்டும் சோலார் பேனல்கள் அமைக்க ப்பட்டு வருகின்றது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த பணிகள் மேற்கொள்ள முறையான அனுமதி பெறப்பட்டு ள்ளதா என தெரிய வில்லை. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com