search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் சாலை, வாறுகால் அமைக்கும் பணிகள் - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சாலை, பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    கோவில்பட்டியில் சாலை, வாறுகால் அமைக்கும் பணிகள் - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • கோவல்பட்டியில் 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
    • ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சாலை பணிகள்

    அதன்படி இனாம்மணி யாச்சி ஊராட்சி மீனாட்சி நகர் 6-வது தெருவில் ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், வாறுகால், கோவில்பட்டி பிரதான சாலையில் ரூ. 9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் மின் அறையை சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் பேவர் பிளாக் தரை, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டுத் தெரு வில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கெங்கா பரமேஸ்வரி, நகராட்சி உதவி பொறியாளர் சரவணன்,

    மாவட்ட மாணவரணி செல்வகுமார், மகளிரணி இணை செயலாளர் சுதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப் பாண்டியன், மாவட்ட வக்கீல் அணி செயலர் சிவபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர்கள் ராமர், ரத்தினவேல், நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ், நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, பழனிகுமார், செண்பக மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் சங்கர்கணேஷ், ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×