என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேன் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
- அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து மோதியது.
- படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (32).
கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று பேரிகை-சூளகிரி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி உடனே அங்கு சென்று பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






