search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    • பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார்.

    இதில் மாவட்ட பொது செயலாளர் அன்பு வீரமணி, நகர தலைவர்கள் எழிலரசன், சதீஸ், வட்டார தலைவர்கள் வடுகநாதன், சங்கரவடிவேல், பாஸ்கர், ஆர்டிஜ பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் தியாகராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேன், ஸ்டீபன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ரோஜர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×