search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரசார் மரியாதை- முன்னாள் மத்திய  மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு
    X

    நினைவு தின நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுக்கப்பட்ட காட்சி.

    நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரசார் மரியாதை- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு

    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், உதயகுமார், பரணி இசக்கி, வக்கீல் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங்பாண்டியன், மண்டல தலைவர்கள் பிவிடி. ராஜேந்திரன், அய்யப்பன், மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ். மணிவண்ணை, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முழு ஆற்றலோடு செயல்படுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    Next Story
    ×