என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

    ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட தலை வர்முரளிதரன் தலைமை தாங்கி கண்டன உரை யாற்றினார்.

    மாநில செய லாளர் வீர. முனிராஜ், பிரபாகர் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயல்தலைவர் அசேன், முத்தப்பா, சுரேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×