என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப்பணிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆய்வு
    X

    ஜி.நாகமங்கலம், கொட்டாயூர் உள்ளிட்ட கிராமங்களில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    திட்டப்பணிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆய்வு

    • நூறுநாள் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
    • சம்மந்தப்பட அதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.நாகமங்கலம், கொட்டாயூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கொட்டாயூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடைப்பெற்று வரும் நூறுநாள் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து கிராம மக்கள் ஜி.நாகமங்கலம் கிராமத்தில் சுமார் ரூ.35 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் தேக்க குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் எப்ப வேண்டுமனாலும் இடித்து விழும் நிலையில் மிகவும் அபத்தான நிலையில் உள்ளது, இதனால் இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகையால் இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் ஆபத்தான நிலையில் உள்ள மேல் தேக்க குடிநீர் தொட்டியை நேரில் சென்று பார்வையிட்டர்.

    பின்னர் இது தொடர்பாக சம்மந்தப்பட அதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி உள்ளிட்ட செயல்படுத்தப்பட்டுவரும் திட்டம் பணிகளையும் ஆய்வு செய்தார்,

    அப்போது மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சேகர்,கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசுதுரை, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம்,இளைஞர் அணி பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு,வட்டாரத் தலைவர்கள் நஞ்சுண்டன், தனஞ்செயன்,ஆடிட்டர் வடிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்,

    Next Story
    ×