search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கேபிஎஸ்எம்.கணிவண்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், வட்டாரத் தலைவர் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் சரவணன்,முன்னாள் மாநில இளைஞரணி காங்கிரஸ் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட பொருளாளர் சிவராமன், மாவட்ட பொது செயலாளர் தியாக கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×