என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணத்தகராறில் மோதல்; வாலிபர் கைது
- வல்லரசு தனது செல்போனை கார்த்திக்கிடம் சரிசெய்ய பொங்கல் பண்டிகை அன்று கொடுத்துள்ளார்.
- இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்ைட கொத்தபேட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது24). கார்பெண்டரான இவரது நண்பர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசு (25).
இந்த நிலையில் வல்லரசு தனது செல்போனை கார்த்திக்கிடம் சரிசெய்ய பொங்கல் பண்டிகை அ ன்று கொடுத்துள்ளார். அவரும் அந்த செல்போனை சரி செய்து கொடுத்துள்ளார். அதற்கான கட்டணம் 2 ஆயிரம் பணம் கொடுக்கவில்லை.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வல்லரசு, கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வனையில் சேர்த்தனர்.
இது குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வல்லரசை கைது செய்தனர்.
Next Story






