search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள்   24-ந்தேதி மறியல் போராட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் 24-ந்தேதி மறியல் போராட்டம்

    • இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
    • எஸ்.சாகுல் அமீது, கணேசன்,ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பல்லடம் மாணிக்காபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் பி.ஆர்.நடராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

    இதில் வருகிற 24-ந்தேதி அன்று ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தில்,ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் எஸ்.சாகுல் அமீது, கணேசன்,ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×