search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில்   கடைகள் அடைப்பு
    X

    நெல்லிக்குப்பம் பகுதியில் கடைகள் அைடக்கப்பட்டு உள்ள காட்சி.

    100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடைகள் அடைப்பு

    • 100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.
    • முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன

    கடலூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் வர்த்தக பயன்பாட்டு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்யக்கோரியும், மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. இதற்கு சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாசர் அலி, நகர அமைப்பாளர் அமர்நாத், ஆலோசகர் முகமது அபுசாலிக், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்கத் தலைவர் சையது முகமது, துணைத்தலைவர் ராஜா ரஹீமுல்லா, இணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார். முன்னதாக நெல்லிக்குப்பம் நகர பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டனர். இதில் அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக கடைத்தெரு வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×