search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார்- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில்  18 கிணறுகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை
    X

    கட்டாலங்குளம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளை அதிகாரிகள் மூடி முத்திரையிட்ட காட்சி.

    விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார்- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 18 கிணறுகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை

    • கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
    • ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில், சேர்வைக்காரன் மடம், கட்டாலங்குளம் மற்றும் குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்குடன் சட்டத்துக்கு புறம்பாக, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.

    இதனால் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் இது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் சேர்ந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தற்போது கட்டாலங்குளம் ஊராட்சியிலும் இது போன்று சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்(கிராம ஊராட்சி) ராமராஜ் (வட்டார ஊராட்சி) தாசில்தார் செல்வகுமார்,மண்டல துணை தாசில்தார் ரம்யா தேவி, வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்படை தலைமை காவலர் மைக்கேல்,கட்டாலங்குளம் ஊராட்சி செயலர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர், அப்போது அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளை மூடி முத்தரையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×