என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஆரோக்கிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கம்பு உடலுக்கு தெம்பு, சோம்பல் நீக்கும் சோளம், குதிரை வாலி தந்திடும் குறைவில்லா வாழ்வு, புற்றுநோயை போக்கும் பனிவரகு என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி தலைமை தபால் நிலையம், பஸ்நிலையம், காமராஜர் சிலை, அரசு மருத்துவக்கல்லூரி, அண்ணாசிலை வழியாக மீண்டும் முகாமை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×