search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவன் மர்மச்சாவு
    X

    கல்லூரி மாணவன் மர்மச்சாவு

    • விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.
    • கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஏர்ரபையனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத்குமார் (வயது23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.

    இது குறித்து பென்னாகரம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. அவரை உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×