search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

    • ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ரோகிணி (வயது 19) என்ற மகள் உள்ளனர். ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி ரோகிணி கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகிணியின் சகோதரர் ராஜகுரு சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாணவி ரோகிணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×