search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
    X

    நீலகிரி அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புவனேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
    • மேலும் மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமம் அறிவியலில் புதுமை கண்டு பிடிப்புகளுக்கான ரூ.50 ஆயிரம் பரிசு தொகை பெற்றமைக்காக பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் 6 முதல் 12 -ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விருதிற்காக அறிவிக்கப்பட்டு, ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வின் புகைப்படங்கள் இணையவழி வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 கட்ட அறிவியல் அறிஞர்கள் வாயிலாக தேர்வு நடைபெற்றது.

    இதில் கண்டுபிடிப்புகள் 14 தேர்ந்தெடுக்கப்பட்டதில் தேசிய அளவில் நீலகிரி மாவட்டம் பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி குறைந்த விலையில் புதுமையான மறு சுழற்சி காகித தீப்பெட்டி உற்பத்தி எந்திரம் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    அந்த காசோலையை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதை தொடர்ந்து கலெக்டர் அம்ரித், மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரம், பெற்றோர் பாக்யம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×