search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும்  கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன.
    • குழந்தைக்கும் ஆரோக்கியமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாது காக்கக் கூடிய குழந்தை களின் நலனைஉறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல் படுவதையும், மையங்களின் பராமரிப்பில் வளர்ப்புச் சூழலை வழங்கு வதையும் உறுதி செய்வது என்பதுஅரசினுடைய முக்கிய கடமையாகும். இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் குழந்தைக்கும் ஆரோக்கி யமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    எனவே, அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, அங்கன்வாடி மைய கட்டடத்தின் நிலை, கழிப்பறை வசதி மற்றும் தூய்மை, சுத்தமான குடிநீர் விநியோகம், சமையலறை கூடம், அங்கன்வாடி மையம்மற்றும் சுற்றுச்சுவர் ஓவியங்கள், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் விளை யாட்டு பயிற்சிகள், அங்கன்வாடி யில் உள்ள கருவிகளின் நிலை, ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதை உறுதி செய்திட தாய்மார்க ளின் கருத்துகளை கேட்டுதெரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின்தேவைகளை அரசிற்கு தெரிவிப்பதை உறுதி செய்து, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகிய வற்றை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×