என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சித்தையன்கோட்டையில் தூய்மை பணி முகாம்
Byமாலை மலர்2 Oct 2023 5:28 AM GMT
- நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
- சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
செம்பட்டி:
சித்தையன்கோட்டை பேரூராட்சி அனைத்து வார்டு பகுதியில், ஒட்டு மொத்த தூய்மை பணி முகாம் மற்றும் உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நிகழ்ச்சிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மேலும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், அப்துல் கரீம், இளநிலை உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X