search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி ரெயில் நிலையத்தில் தூய்மை பணி
    X

    ரெயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

    • சமூக பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
    • முடிவில் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் நாட்டு நல பணி திட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து சமூகப் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட பணி 30 மாணவர்கள் சீர்காழி ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் உள்ள செடிகள்,புற்கள், மற்றும் குப்பைகளை அப்புற ப்படுத்தினர்.

    ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் தலைவர் பா. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சீர்காழி ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி, ரோட்டரி சங்கம் மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், செயலாளர் ரவி ,பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் துரைசாமி, மோகனசுந்தர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார், இணைச் செயலாளர் மார்க்ஸ் பிரியன், ரயில் சங்க உறுப்பினர் ராஜராஜன், சுதாகர் அப்பாஸ் அலி, சண்முகம் மற்றும் சீர்காழி ரயில் நிலைய அலுவலர் மற்றும் டி.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×