search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் தூய்மை இந்தியா மாரத்தான் ஒட்டம்
    X

    கோத்தகிரியில் தூய்மை இந்தியா மாரத்தான் ஒட்டம்

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி என்.பி.ஏ. நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வலிமையான இந்தியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    மாரத்தானை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆல்ப்பிரட் எபனேசர், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×